சமூக செயற்பாட்டாளர், அம்பேத்கரிய இயக்க முன்னோடி ஜெய்பீம் சிவராஜ் காலமானார்!
கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலைச் சேர்ந்த ஜெய்பீம் சிவராஜ் சிறுவயது முதலே அம்பேத்கரின் சமூக செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். இவரது இயற்பெயர் மணி. சென்னையின் முன்னாள் மேயர் பேராசிரியர் என்.சிவராஜின் வழிகாட்டுதலின்படி இவர் முதுகலை பொருளாதாரமும், சட்டமும் படித்து முடித்தார். பின்னர் கர்நாடக அரசின் புள்ளியியல் துறையில் 26 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
திருமணம் செய்து கொள்ளாமல் அம்பேத்கரின் சமூக செயல்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்து வந்த இவர், டாக்டர் அம்பேத்கர், என்.சிவராஜ், அன்னை மீனாம்பாள், ஆரிய சங்காரன், பள்ளிக்கொண்டா கிருஷ்ணசாமி, ஜே.சி.ஆதிமூலம், பி.எம்.சுவாமி துரை, சி.எம்.ஆறுமுகம் உள்ளிட்டோருடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்றார்.
பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் டாக்டர் அம்பேத்கர் மக்கள் நல பேரவை என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தொடர்ந்து சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்ததுடன், அவர்கள் அரசு வேலைக்கு செல்வதற்கான உதவிகளையும் செய்து வந்தார்.

கோலார் தங்கவயல் சுரங்க தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், தொழிற்சங்க போராட்டங்கள், வீட்டு மனை, இலவச சட்ட ஆலோசனை, முதியோர் ஓய்வூதியம், அரசின் இலவச காப்பீடு, குடும்ப அட்டை விண்ணப்பித்தல் போன்றவற்றைப் பெறுவதில் தொடர்ந்து உதவி வந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜெய்பீம் சிவராஜ் காலமானார்.
அவரது மறைவுக்கு இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், தென்னிந்திய சாக்கிய பவுத்த சங்க செயலாளர் துரை ராஜேந்திரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். கோலார் தங்கவயலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட ஜெய்பீம் சிவராஜின் உடலுக்கு அம்பேத்கரிய அமைப்பினரும், தமிழ் அமைப்பினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
