அட... ரஜினிக்கே சர்ப்ரைஸ்!! ஜெயிலர் படத்தில் எஸ்.பி.பி. பாடல்!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் திரைப்படம் இன்று காலை வெளியாகி ரசிகர்களிடயே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரஜினிகாந்த் படத்தில் எண்ட்ரி பாடலை எப்போதுமே செண்ட்டிமெண்டாக எஸ்பிபி பாடுவது தான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது அவர் உயிரோடு இல்லை. இந்த குறையை தீர்க்க ரசிகர்கள் ரத்தமாரே ஜெயிலர் படப்பாடலை ஏஐ தொழில்நுப்டத்த்தில் எஸ்பிபி குரலில் உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.
#Rathmaarey song SPB sir version ❤️❤️ We miss you sir.. now #Jailer is complete (AI) 🙏@sunpictures @anirudhofficial #JailerBookings #Rajinikanth #SuperstarRajinikanth #Thalaivar #JailerFDFS #Jailerreview pic.twitter.com/T92TR5vMIY
— Achilles (@Searching4ligh1) August 9, 2023
அப்படியே எஸ்பிபி குரலில் இந்த பாடல் ஒலிக்கும் போது பலரின் கண்களும் கலங்குகின்றன. இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஜெயிலர் திரைப்படம் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மோகன் லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு உட்பட பல முண்ணனி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் செண்டிமெண்ட் பாடலாக படத்தில் வரும் ரத்தமாரே பாடல் ரசிர்களின் மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்நிலையில், ரசிகர்களின் மனதை மேலும் உருகச்செய்யும் வகையில் ஏஐ தொழில்நுட்ப வல்லுனர் செய்துள்ளனர்.
அனிருத் இசையமைப்பில் விக்னேஷ் சிவன் எழுதிய ரத்தமாரே பாடலினை விஷால் மிஸ்ரா சிறப்பாக பாடியிருப்பார். மிகவும் மெலடி பாடலான இந்த பாடலை எஸ்பிபி வெர்சனில் உருவாக்கிவிட்டார்கள். எஸ்பி பாலசுப்பிரமணியம் உயிரோடு மீண்டும் வந்து விட்டாரோ என தோன்றும் வகையில் வடிவமைத்துள்ளார்கள்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?