சபாநாயகரை முற்றுகையிட்ட திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!

 
சட்டப்பேரவை

 

சட்டப்பேரவையில் சபாநாயகரை முற்றுகையிட்டு தீவிர அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்களை உடனடியாக வெளியேற்றும்படி சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார். சர்க்காரியா கமிஷன் மற்றும் மிசா கைது தொடர்பான முதலமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க மறுத்த காரணத்தினால் திமுகவினர் இந்த தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே பேசப்பட்ட விஷயங்களைதான் முதல்வர் பேசினார் - சபாநாயகர் விளக்கம்

சட்டப்பேரவையில் தகுந்த முறையில் பேச வாய்ப்பு தருவதாகக் கூறியும் திமுக உறுப்பினர்கள் அதை எதையும் கேட்க மறுத்து தொடர்ந்து கூச்சலிட்டனர். இதன் காரணமாக நீண்ட நேரத்திற்குப் பிறகு வேறு வழியின்றி அவர்கள் அனைவரும் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

திமுக உறுப்பினரை பார்த்து கெட் அவுட் என கத்திய சபாநாயகர்

சபாநாயகரின் இந்த அதிரடியான உத்தரவினால் பேரவையின் உள்ளேயும் வெளியேயும் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் சம்பவத்தால் சட்டமன்ற வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களும் அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டனர்.