இலங்கை அதிபர் தேர்தல்.. வேட்பாளராக களமிறங்கும் முன்னாள் ராணுவ தளபதி!

2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் மத்தியில் பெரும் புரட்சி வெடித்தது. இதனால், அதிபராக இருந்த கோட்டபய ராஜபக்சே, தனது பதவியை ராஜினாமா செய்து, நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சம் புகுந்தார். இதனால் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றார்.
அனைத்துக் கட்சி ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் நிறைவடையவுள்ளது. இதனிடையே, இலங்கை அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை இலங்கை தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. அதன்படி, இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தற்போது ஜனாதிபதியாக உள்ள ரணில் விக்கிரமசிங்க மீண்டும் போட்டியிட தீர்மானித்துள்ளார். இந்தநிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார். இதனை சரத் பொன்சேகா தனது X தளத்தில் அறிவித்துள்ளார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா