ரங்கா ரங்கா கோஷத்துடன் தேரோட்டம்... அலையென திரண்ட பக்தர்கள்!

 
ஸ்ரீரங்கம் தேரோட்டம்
 

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றதாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆதிபிரம்மோற்ஸவம் எனப்படும் பங்குனித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழாவில்  தினசரி நம்பெருமாள் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வந்தார்.

ஸ்ரீரங்கம்

முக்கிய நிகழ்வான பங்குனித்தேரோட்டம் 10ம் திருநாளான இன்று காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நம்பெருமாள் ரத்தின அபயஹஸ்தம், முத்து பாண்டியன் கொண்டை மார்பில் நீலநாயகம் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தாயார்சந்நதி வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி கோரதத்திற்கு வந்தடைந்தார்.

ஸ்ரீரங்கம் தேர்

அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் நான்கு சித்திரை வீதிகளின் வழியாக வலம் வந்து, நிலையை அடைந்த பின்னர் நம்பெருமாள் மூலஸ்தானத்தை சென்றடைவார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. தேர்திருவிழாவிற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web