மாமியாரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற மருமகள்... பகீர் சிசிடிவி காட்சிகள்!

 
adi

ஹைதராபாத் அருகே உள்ள செகந்தராபாத் பகுதியில் மருமகள் ஒருவர் தனது மாமியாரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் சமையலறையில் வைத்து 60 வயதுக்கும் மேற்பட்ட பத்மாவதி என்ற முதியவரை அவரது மருமகள் சமையலறை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றுள்ளார். இந்தத் திடீர் தாக்குதலில் பத்மாவதி படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்குப் போராடியுள்ளார். குடும்பத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த சொத்துத் தகராறே இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு பிரதான காரணம் என காவல் துறை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்தக் கொடூரத் தாக்குதலின் காட்சிகள் முழுமையாகப் பதிவாகியுள்ளன. அதில் 33 வயதான மருமகள், மாமியார் பத்மாவதியின் தலைமுடியைப் பிடித்து கொடூரமாக இழுத்துத் தள்ளிக் கத்தியால் குத்தும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இந்தச் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியும் கொந்தளிப்பும் உருவானது. காணொளி பரவியதைத் தொடர்ந்து விழிப்புற்ற காவல் துறை அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மாமியாரைக் கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக 33 வயது நிரம்பிய மருமகளைக் காவல் துறையினர் உடனடியாக அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட சமையலறை கத்தியைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கத்தியால் குத்தப்பட்டுப் படுகாயமடைந்த பத்மாவதிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சொத்துக்காகக் பெற்ற மாமியாரையே மருமகள் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.