102 வயதிலும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்த ஸ்டாலினின் தாய்மாமா!

 
ஸ்டாலின் தாய்மாமா திருவாரூர் தட்சிணாமூர்த்தி ஸ்டாலின் தாய்மாமா திருவாரூர் தட்சிணாமூர்த்தி

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (ஏப். 23) நடைபெற்ற நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாய்மாமாவும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாவின் மூத்த சகோதரருமான தட்சிணாமூர்த்தி (102), தனது தள்ளாத வயதிலும் நேரில் வந்து வாக்களித்து அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், காட்டூர் பகுதியில் வசித்து வரும் தட்சிணாமூர்த்திக்கு தற்போது 102 வயதாகிறது. வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியைத் தேர்தல் ஆணையம் வழங்கியிருந்தது. ஆனால், ஜனநாயகக் கடமையைச் சாவடிக்கே சென்று ஆற்ற வேண்டும் என்ற உறுதியுடன் அவர் அதனை மறுத்துவிட்டார்.

வாக்குப்பதிவு வாக்காளர்கள்

நேற்று காலை, காட்டூர் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்குத் தனது குடும்பத்தினரின் உதவியுடன் சக்கர நாற்காலியில் தட்சிணாமூர்த்தி அழைத்து வரப்பட்டார். அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு வழிவிட்டு மரியாதை செய்தனர். தனது வாக்கைப் பதிவு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வாக்களிப்பது நமது உரிமை, அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.

வாக்குப்பதிவு வாக்கு பீகார் தேர்தல்

இளம் தலைமுறையினர் பலரும் விடுமுறை தினமாகக் கருதி வாக்களிக்கத் தயங்கும் நிலையில், ஒரு நூற்றாண்டு கடந்த முதியவரின் இந்தச் செயல் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த தலைவர் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினரான இவர், ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் நேரில் வந்து வாக்களிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.