புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து... சட்டப்பேரவையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்!

 
புதுச்சேரி
 

பல வருடங்களாகவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி கோரிக்கை வைக்கப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என மத்திய அரசை வலியுறுத்தும் தனிநபர் தீர்மானங்கள் அரசு தீர்மானமாக இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இன்று சட்டபேரைவையில் மாநில அந்தஸ்து வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இது தொடர்பாக டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம் எனவும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 

தேர்வெழுத தடுப்பூசி கட்டாயம் ! புதுச்சேரி அரசு அதிரடி!

இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில், புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று எதிர்க் கட்சித்தலைவர் சிவா, திமுக எம்எல்ஏ-க்கள் நாஜிம், செந்தில்குமார், அரசுக்கு ஆதரவான சுயேச்சை எம்எல்ஏ நேரு ஆகியோர் தனி உறுப்பினர் தீர்மானங்களைக் கொண்டு வந்தனர்.புதுச்சேரி யூனியன் பிரதேசம் மத்திய அரசின் உள்துறையால் ஆளும் பகுதியாக தொடர்கிறது.

ஜிப்மர் மருத்துவமனை புதுச்சேரி  புதுவை

கோவா, சண்டிகர் போன்றவை தனி மாநிலங்களாகிவிட்டன. புதுச்சேரிக்கும் தனி மாநில அந்தஸ்து கோரி பலமுறை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. அந்தவிதத்தில், மாநில அந்தஸ்து கோரிக்கை 1970ல் தொடங்கி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என தெரிவித்துள்ளது. எனவே, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசை இச்சட்டப்பேரவை வலியுறுத்துகிறது” என்று அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக பேரவைத்தலைவர் செல்வம் தெரிவித்தார்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா