கொடூரத்தின் உச்சம்... 7 தெருநாய்கள் கடித்துக் குதறியதில் இளம்பெண் பரிதாப பலி... பகீர் சிசிடிவி காட்சிகள்!
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் சாக்கன் அருகே உள்ள அம்பேதான் சௌக் பகுதியில், தெருநாய்கள் கடித்ததில் 32 வயதுப் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் ஷோபா வாகமரே என்ற பெண் சர்வீஸ் சாலை வழியாகச் சென்றபோது, 6-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் அவரைச் சூழ்ந்து சரமாரியாகத் தாக்கியுள்ளன. நாய்களிடமிருந்து தப்பிக்க அவர் கற்களை வீசிப் போராடியும், ஆவேசமடைந்த நாய்கள் அவரைத் தரையில் தள்ளி கை, கால் மற்றும் கழுத்துப் பகுதிகளில் கொடூரமாகக் கடித்ததால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
🚨Heartbreaking Tragedy at Koderma Station: Negligence and Haste Claim a Mother's Life, Leaving Two Infants Orphaned.
— Ramesh Tiwari (@rameshofficial0) April 25, 2026
Incident: A 24 year old mother lost her life due to the dangerous attempt to catch a train, further exposing the stark lack of safety vigilance at our railway… pic.twitter.com/Z2Qbz1OZcA
மறுநாள் காலை அவரது உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டபோது, இது ஏதேனும் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, நாய்கள் கூட்டமாகச் சேர்ந்து அந்தப் பெண்ணைத் தாக்கும் அதிர்ச்சிகரமான காட்சிகள் பதிவாகி இருந்தன. இதன் மூலம் அந்தப் பெண் தெருநாய் தாக்குதலால் தான் உயிரிழந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் ஆத்திரத்தையும் கிளப்பியுள்ளது.
சாக்கன் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இது குறித்துப் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தனியாகச் செல்லவே அஞ்சுவதாகப் புகார் தெரிவித்துள்ள மக்கள், ஆபத்தான நாய்களை உடனடியாகப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். நகரங்களில் பெருகி வரும் தெருநாய் தொல்லைக்கு இந்தச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
