பெற்றோர்களே உஷார்... பள்ளி வேனில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. கிளீனர் அட்டூழியம்!

 
பள்ளி மாணவி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பள்ளி வேனில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிளீனரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பெற்றோர்களே... உங்கள் குழந்தைகள் பள்ளி மற்றும் தனியாருக்கு சொந்தமான வேன், பேருந்துகளில் பாதுகாப்பாக பள்ளி, கல்லூரிக்கு சென்று வருகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக்கோங்க.

இது குறித்து போலீசார் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பங்களா தெரு, சிதம்பரம் காம்பவுண்டை சேர்ந்தவர் திருப்பதி (72). இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு சொந்தமான வேனில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார். 

இந்த வேனில் பல்வேறு இடங்களில் இருந்து மாணவிகளை காலையில் ஏற்றி வந்து பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதும், மாலையில் மாணவிகளை ஏற்றி சென்று வீடுபகுதியில் இறக்கி விடுவதும் வாடிக்கை.  பள்ளி வேனில் தினமும் ஏராளமான மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், வேனில் பள்ளிக்கு வந்து செல்லும் 10 வயது மாணவி ஒருவருக்கு, கடந்த சில மாதங்களாகவே திருப்பதி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து பெற்றோருடன் சென்று சிறுமி கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருப்பதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!