"தாமதமாக வரும் மாணவர்களைத் தண்டிக்கக் கூடாது!" - பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவு!

 
பள்ளி திறப்பு மாணவர்கள் பள்ளி திறப்பு மாணவர்கள்

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் நேற்று முதல் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், "பள்ளிக்குத் தாமதமாக வரும் மாணவர்களை எக்காரணம் கொண்டும் எவ்வித தண்டனைக்கும் உள்ளாக்கக் கூடாது" எனத் தமிழக தனியார் பள்ளிகள் இயக்குனரகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் கல்வித்துறை அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில் பள்ளி நிர்வாகங்களுக்குக் கடுமையான சில கட்டுப்பாடுகளும் அறிவுறுத்தல்களும் விதிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசல் அல்லது தவிர்க்க முடியாத குடும்பச் சூழ்நிலைகள் காரணமாக ஏதேனும் ஒரு மாணவர் பள்ளிக்குக் குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டித் தாமதமாக வந்தால், அவரைப் பள்ளிக்குள் அனுமதிக்காமல் வாயிலிலேயே நிறுத்தி வைப்பதோ அல்லது மீண்டும் வீட்டிற்குத் திருப்பி அனுப்புவதோ முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பானது; அதனைச் செய்யக் கூடாது.

பள்ளி பள்ளிகள் திறப்பு மாணவர்கள்

தாமதமாக வரும் மாணவர்களை மற்ற மாணவர்களின் முன்னிலையில் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைப்பது, வெயிலில் முட்டி போட வைப்பது போன்ற எவ்விதமான உடலளவிலான அல்லது மனதளவிலான தண்டனைகளையும் வழங்கக் கூடாது. அவர்களை உடனடியாக வகுப்பறைக்குள் அனுமதித்துத் தடையின்றிப் பாடம் கற்க வழிவகை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் புதிய கல்வியாண்டுத் தொடங்கி நேற்று முதல் வகுப்புகள் முழுவீச்சில் ஆரம்பமாகியுள்ள சூழலில், இந்த உத்தரவு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

பள்ளி புத்தகப்பை விடுமுறை  மாணவர்கள் திறப்பு

பள்ளித் தொடக்க நாட்களிலேயே மாணவர்களைத் தண்டிப்பது அவர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தைக் குறைப்பதோடு, கடுமையான மன உளைச்சலையும் ஏற்படுத்தும். எனவே, பள்ளிகள் மாணவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்தும் இடமாக இருக்கக் கூடாது, மாறாக அன்புடன் வரவேற்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இந்த புதிய விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளன.