நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள்! கோர விபத்தில் பலியான ராணுவ வீரர்!

 
நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள்! கோர விபத்தில் பலியான ராணுவ வீரர்!


விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செஞ்சி பகுதியில் நங்காத்தூரி வசித்து வருபவர் மணி. இவருக்கு வயது 52. இவர் ஓய்வுபெற்ற ராணுவவீரர்.
இவர் செஞ்சி அருகே உள்ள நந்திவாடியில் உள்ள உறவினர் வீட்டு காதணி விழாவுக்கு சென்று அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் நங்காத்தூருக்கு புறப்பட்டார்.

விழுப்புரம்-செஞ்சி சாலையில் உள்ள முட்டத்தூர் பகுதியில் மணி மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக மணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த முட்டத்தூர் பகுதியை சேர்ந்த எல்லப்பன் மீது மோதியது. எல்லப்பனுக்கு வயது 40.

நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள்! கோர விபத்தில் பலியான ராணுவ வீரர்!


இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து மணி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவரும் படுகாயம் அடைந்தார். காயமடைந்த இருவரையும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே மணி பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த எல்லப்பனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் காவல்துறை வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

From around the web