அதிர்ச்சி வீடியோ!! எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீவிபத்து !!
கர்நாடக மாநிலம் பெங்களூர் சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையத்திற்கு உத்யான் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை வந்து சேர்ந்தது. இதில் பயணிகள் இறங்கிச் சென்ற நிலையில், அந்த ரயிலில் திடீரென காலை 7.30 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.பி1 மற்றும் பி2 பெட்டிகளில் இருந்து திடீரென அதிகளவில் புகை வரத் தொடங்கியதும் உடனடியாக ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
#WATCH | Bengaluru, Karnataka: Fire broke out in Udyan Express after it reached Sangolli Rayanna Railway Station. The incident happened 2 hours after passengers deboarded the train. No casualties or injuries. Fire engine and experts reached the spot and asserting the situation.… pic.twitter.com/laBLreFDgI
— ANI (@ANI) August 19, 2023
#WATCH | Bengaluru, Karnataka: Fire broke out in Udyan Express after it reached Sangolli Rayanna Railway Station. The incident happened 2 hours after passengers deboarded the train. No casualties or injuries. Fire engine and experts reached the spot and asserting the situation.… pic.twitter.com/laBLreFDgI
— ANI (@ANI) August 19, 2023
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்தால் மெஜஸ்டிக் அருகே உள்ள சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையம் பகுதியில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. தீப்பிடித்த கோச்சில் இருந்து மீதமுள்ள பெட்டிகள் தனியாகப் பிரிக்கப்பட்டன.
தொழில்நுட்பக் கோளாறால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும், விசாரணைக்கு பிறகே முழுமையான காரணம் தெரியவரும் எனவும் கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நின்றுகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!