குடும்பத் தகராறால் விபரீதம்....தாயும், 3 மகள்களும் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

 
இருமல் மருந்தில் விஷம்

 தமிழகத்தில் மது போதையால் பல குடும்பங்கள் வாழ்வாதாரம் தொலைத்து சீரழிந்து வருகின்றன. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி   மதுரா சீனங்கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் 40வயது  வேடியப்பன். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி  ராஜேஸ்வரி . இவருக்கு 18, 16,13 வயதில் 3 மகள்கள். இவர்களில் மூத்த மகள்  திருவண்ணாமலை கல்லூரியில் நர்சிங் படிப்பு படித்து வருகிறார்.  வேடியப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

போதை குடி சாராயம் குற்றம் க்ரைம்

இதற்காக பணம் கேட்டு தினமும் வீட்டில் அடிதடி சண்டை, தகராறு தான். வழக்கம் போல்  நேற்று இரவும் வேடியப்பன் மதுகுடிக்க மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பின்னர் அவர் வீட்டைவிட்டு வெளியே சென்று விட்டார்.கணவர் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்ததால் மனமுடைந்த ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதனையடுத்து வீட்டில் இருந்த பூச்சிமருந்தை எடுத்து குடித்து விட்டார். இதனை பார்த்து கொண்டே இருந்த அவரது  3 மகள்களும் கதறி துடித்து மீதம் இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கிவிட்டனர். விஷயம் அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 4 பேரையும் மீட்டு  ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ்

அங்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த மனைவி மற்றும் அவரது 3 மகள்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட விஷயம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web