5 வயது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்து தந்தை தூக்கிட்டு தற்கொலை... பயங்கரம்!
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியில் குடும்பப் பிரச்சனை காரணமாக, தந்தை ஒருவர் தனது 5 வயது மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் மற்றும் மனைவிக்கு இடையே நீண்ட நாட்களாகத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வீட்டில் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததைக் கண்டு சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள அதிகாரிகள், தற்கொலைக்கான சரியான காரணங்கள் மற்றும் உயிரிழப்பிற்கு முன் அவர் ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு 5 வயது குழந்தை இழந்த இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
இந்தக் கொடூரமான முடிவை எடுத்ததற்கான பின்னணி குறித்து அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினரிடம் காவல்துறையினர் வாக்குமூலங்களைப் பெற்று வருகின்றனர். மன அழுத்தத்தின் காரணமாகத் தந்தை இந்தச் செயலில் ஈடுபட்டாரா அல்லது திட்டமிட்டே இதைச் செய்தாரா என்பது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன
