மே 1 முதல் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

 
சென்னை உயர் நீதிமன்ற
 


சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் விடுமுறை கால நீதிமன்றம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடைக் கால விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதற்கான நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. அதன்படி அவசர வழக்குகளை நீதிபதிகள் மாலா, அருள் முருகன், விக்டோரியா கெளரி ஆகியோர் மே 7, 8 தேதிகளில் விசாரிப்பார்கள் என்றும் மே 14, 15, 21, 22 ஆகிய தேதிகளில் நீதிபதிகள் லட்சுமி நாராயணன், நிர்மல் குமார், சுவாமிநாதன் ஆகியோரும் மே 28, 29 ஆகிய தேதிகளில் நீதிபதிகள் சத்திய நாராயணா பிரசாத், செந்தில் குமார் ராமமூர்த்தி, திலகவதி ஆகியோரும் விசாரிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் பாலாஜி, ஜோதிராமன், சக்திவேல், ராமகிருஷ்ணன், வேல் முருகன், பூர்ணிமா, ராஜசேகர், ஸ்ரீமதி, விஜயகுமார், வடமலை, ஷமீன் அகமதி, ஆனந்த் வெங்கடேஷ், தண்டபாணி ஆகியோர் விடுமுறைக் கால நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web