சூப்பர்... விரைவில் சென்னை விமான நிலையத்திலிருந்து பேருந்து சேவை!

சென்னை சர்வதேசவிமான நிலையத்தின் உள்ளே இருந்து விரைவில் மாநகர போக்குவரத்து பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் பயணிகள் சென்று வர பேருந்து சேவை இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், விமான நிலையங்களுக்கு செல்லும் பொதுமக்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய முனையத்தில் இருந்து பஸ் சேவையை பெற, உடைமைகளை சுமந்துகொண்டு ஜிஎஸ்டி சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டும். அதிலும் கோடை வெயில், கொட்டும் மழைக்காலத்தில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
அதற்கான தீர்வு விரைவில் மாநகர பேருந்து போக்குவரத்து மூலம் கிடைக்க உள்ளது. இதன்படி சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையும், ரேடியல் சாலை, சோழிங்க நல்லூர் வழியாக அக்கரை வரையும் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஜிஎஸ்டி சாலையில் இருந்து மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விமான நிலையத்திற்குள் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ள மாநகரபோக்குவரத்து கழகம், இதற்கான கோரிக்கையை விமான அமைச்சகத்திடம் முன்வைத்துள்ளது. இதற்கான அனுமதி கிடைத்தவுடன் அரசுபேருந்துகள் விரைவில் விமான நிலைய வளாகத்திற்குள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!