சூப்பர் ... அரசுப் பள்ளிகளில் QR கோடு மூலம் மாணவர் சேர்க்கை!
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க வரும் பெற்றோர்களுக்கு எளிதாகும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புட்குழி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய QR கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய முயற்சிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் “சூப்பர்” என குறிப்பிட்டிருப்பதன் மூலம், இந்த முயற்சி பெற்றோர்கள் மற்றும் பள்ளிக்கல்வி சமுதாயத்திடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த QR கோடு வசதி மூலம் விண்ணப்பதாரர்கள் விரைவாக, சுலபமாக விண்ணப்பங்களை பெறலாம். மேலும் நேரம் மற்றும் முயற்சி குறையும் என பள்ளி நிர்வாகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இந்த முறையால், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்வி சேவைகள் மேலும் மேம்படுத்தப்படுகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை சீராகவும், விரைவாகவும் நடைபெறுவதில் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
