ஆ. ராசா உட்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்... பரபரப்பு!

 
ஆ.ராசா

 
வக்ஃப் திருத்த மசோதா குறித்த பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் சில எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையடுத்து இந்த எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்தாண்டு அறிமுகம் செய்தது.

ஆ.ராசா

வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத இரண்டு நபா்களை உறுப்பினா்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது, வக்ஃப் நிலமா, இல்லையா என்பதை மாவட்ட நிா்வாகம் மற்றும் நீதிமன்றங்கள் முடிவு செய்ய அதிகாரம் அளிப்பது உட்பட  பல்வேறு மாற்றங்கள் இடம்பெறும் வகையில் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

ஆ.ராசா
பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் திமுக எம்.பி. ஆ.ராசா உட்பட 21 மக்களவை உறுப்பினா்களும், திமுக மாநிலங்களவை உறுப்பினா் முகமது அப்துல்லா உட்பட 10 மாநிலங்களவை உறுப்பினா்களும் அடங்கிய கூட்டுக்குழு அமைக்கப்பட்டு வக்பு வாரியம் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. இந்த கூட்டுக்குழுக் கூட்டத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டை முன்வைத்து ஆ. ராசா உட்பட 10 எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கல்யாண் பானர்ஜி, முகமது ஜவைத், அசாதுதீன் ஓவைசி, நாசிர் உசேன், மொஹிபுல்லா, எம். அப்துல்லா, அரவிந்த் சாவந்த், நதிமுல் ஹக், இம்ரான் மசூத் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web