புயல் பாதிப்பு... ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 நிவாரணம் அறிவித்து தமிழக அரசு உத்தரவு!
ஃபெங்கல் புயல் பாதிப்பு மற்றும் அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இரு நாட்களுக்கும் மேலாக மழை, வெள்ளம் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கார்டு அடிப்படையில் நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிகனமழையால் கடுமையான மழைப்பொழிவை சந்தித்துள்ள விழுப்புரம்,கடலூர், மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இரு நாட்களுக்கும் மேலாக மழை, வெள்ள சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், கால்நடைகள் உயிரிழப்புக்கு ரூ.37,500 நிவாரணமும், ஆடுகள் உயிரிழப்புக்கு நிவாரணமாக ரூ.4 ஆயிரம், கோழிகள் இறப்புக்கு ரூ.100 நிவாரணம் வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
