2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடுகிறது தமிழக சட்டமன்றம்!

 
விஜய் சட்டசபை கூட்டணி கவிழுமா

இரண்டு நாட்கள் வார இறுதி விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடுகிறது. இன்றைய கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய், தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தனித் தீர்மானம் ஒன்றை முன்மொழிகிறார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' கட்டாயமாக முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இத்தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

சட்டசபை சட்டப்பேரவை விஜய் முதல்வர் பட்ஜெட்

சமீபத்தில் நடந்த சில அரசு மற்றும் பல்கலைக்கழக விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் வரிசை தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் இன்று நடைபெறும் விவாதத்திற்குப் பிறகு, இத்தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.