"மலையாளச் சொந்தங்களுக்கு ஓணம் நல்வாழ்த்துகள்" - தமிழக முதல்வர் விஜய் பதிவு!

 
ஓணம் திருவோணம்

ஓணம் திருநாளை முன்னிட்டு, உலகெங்கும் வாழும் மலையாள மக்களுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் தனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

"உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்" என்று முதலமைச்சர் விஜய் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஓணம்

கேரள மாநிலத்தின் அறுவடைத் திருநாளான இந்த ஓணம் நாளில், அனைவரது இல்லத்திலும், உள்ளத்திலும் அன்பும் மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும் என அவர் வாழ்த்தியுள்ளார்.

அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும் வளத்தையும் வழங்கட்டும் என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.