பிரிட்டன் பொதுத்தேர்தலில் தமிழ் பெண் வெற்றி!

 
உமார்

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போ நாடாளுமன்ற தொகுதியில் தமிழ் பெண்ணான உமார் குமரன் வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கை வம்சாவளி தமிழரான இவர் லேபர் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அந்த கட்சி பிரிட்டனில் சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. உமார் குமரன் போட்டியிட்ட தொகுதியில் மொத்தம் 54.18 சதவீத வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர். அதில் 19,415 வாக்குகளைப் பெற்று உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார்.

உமார்

கிழக்கு லண்டனில் பிறந்து, வளர்ந்த உமா குமரனின் பெற்றோர் இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள். கடந்த 1980களில் உள்நாட்டு போரின் போது பிரிட்டன் நாட்டில் அவர்கள் குடியேறினர். குயின் மேரி பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த உமார் குமரன், தற்போது ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவில் வசித்து வருகிறார்.

அண்மையில் ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது பாட்டி உயிரிழந்ததாகவும். தேர்தல் காரணமாக இறுதிச் சடங்கில் விர்ச்சுவல் முறையில் பங்கேற்றதாகவும் அவர் சொல்கிறார். இது தான் எங்கள் வாழ்வின் எதார்த்தம். இருந்தாலும் தேர்தலில் தான் போட்டியிடுவது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்கும் பெருமை சேர்ப்பதாக கூறியுள்ளார். 

சமூக செயற்பாட்டாளரான உமா குமரன் பல்வேறு சமூக அமைப்புளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். ‘புரட்சி என்பது என் ரத்தத்தில் கலந்தது’ என்கிறார் எம்.பி உமா. அவரது தாத்தா யாழ்ப்பாணத்தின் முதல் தொழிற்சங்க உறுப்பினர்களில் ஒருவராக செயல்பட்டவர் என்கிறார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் லேபர் கட்சியுடன் இணைந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

From around the web