தமிழிசை சௌந்திரராஜன் ராஜினாமா... தேர்தலில் போட்டியிட முடிவு ?!
தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன். இவர் இருமாநிலங்களையும் இரட்டைக் குழந்தைகள் போல் பராமரிப்பேன் என பதவியேற்பு விழாவில் கூறியிருந்தார். அதற்கேற்ப இரு மாநிலங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்து திறம் பட செயலாற்றி வருகிறார். அத்துடன் தமிழக பாஜக மாநில தலைவராகவும் இருந்து வருகிறார்.
இவர் எம்.பி. , எம்.எல்.ஏ., ஆகிய அனைத்து முயற்சிகளிலும் தோல்வியடைந்து , இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும், நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்தார். 2019 ல் எதிர்த்து தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மாநிலம் முழுவதும் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!