கேரளத்தில் இன்று மாலை முதல் மதுபான கடைகளை மூட உத்தரவு... ஏப்ரல் 26ம் தேதி வாக்குப்பதிவு!
Apr 24, 2024, 12:05 IST
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கேரள மாநிலம் முழுவதும் இன்று ஏப்ரல் 24ம் தேதி புதன்கிழமை மாலை 6 மணி முதல் ஏப்ரல் 26ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை கள்ளுக் கடைகள், பார்கள் உள்ளிட்ட அனைத்து மதுபானக் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ம் தேதி வெள்ளிக்கிழமை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதே போன்று வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ம் தேதி கேரளத்தில் மதுக்கடைகள் இயங்காது.
முன்னதாக, தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு மாஹேயில் பகுதியிலும் ஏப்ரல் 24ம் தேதி முதல் 26 வரை மதுக்கடைகள் மற்றும் மதுபானம் வழங்கும் உணவகங்களை மூட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். மாஹே கேரளாவில் உள்ள புதுச்சேரியின் ஒரு பகுதியாகும்.
From around the
web