தலைக்குப்புற கவிழ்ந்த டாஸ்மாக் லாரி... சரக்கு பாட்டில்களை அள்ளிச்சென்ற ‘குடி’மகன்கள்!

 
டாஸ்மாக் லாரி விபத்து

சாலை விபத்து ஒன்றில், டாஸ்மாக் மதுபான பாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், எதைப் பற்றியும் கவலைப்படாமல் சரக்கு பாட்டில்களை அந்த வழியே சென்ற ‘குடி’மகன்கள் கர்ம சிரத்தையாக அள்ளிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் டாஸ்மாக் குடோனில் இருந்து வாணியம்பாடி, நாட்றம்பள்ளி ஆகிய இடங்களில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு மதுபாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி ஆம்பூர் அடுத்த மரப்பட்டு சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து நேரிட்டது.

டாஸ்மாக்

இதனால், லாரியில் கொண்டு செல்லப்பட்ட 790 மதுபாட்டில்கள் சாலையில் சிதறிக் கிடந்தன. திருப்பத்தூர் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் சிதறி கிடந்த பாட்டில்களை முதலில் எடுக்க தொடங்கினர். லாரி டிரைவரும், கிளீனரும் மதுபாட்டில்களை ஏற்றிச் சென்ற அவர்களை தடுக்க முயன்றனர். பின்னர் உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், மதுபாட்டில்களை வைத்திருந்த பொதுமக்களை விரட்டி அடித்தனர். இதனால் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுபாட்டில்களின் மதிப்பு சுமார் ரூ.38 லட்சம் இருக்கும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web