வீடியோ!! ”வாடகை கொடுக்க கூட பணமில்ல”!! டாக்சி டிரைவரானேன்!! கண்ணீருடன் பிரபல நடிகர்!!
90களில் தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். 'காதல் தேசம்', படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. சூப்பர் டூப்பர் வெற்றியடைந்த இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து படங்கள் குவிந்தன. இவருடைய முழு பெயர் மிர்சா அப்பாஸ் அலி. இவர் கொல்கத்தாவை பூர்வீகமாக கொண்டவர். அங்கு மாடலிங்கில் இருந்த அவர் தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட படங்களில் நடிக்க தொடங்கினார். காதல் தேசத்திற்கு பிறகு விஐபி, பூச்சூடவா, ஜாலி, ஹேராம், பம்மல் கே சம்மந்தம், ரஜினியுடன் படையப்பா உட்பட பல படங்களில் நடித்து உள்ளார்.
ஏராளமான பெண் ரசிகைகளை குறுகிய காலத்தில் பெற்ற நடிகர் அப்பாஸ், ஒரு கட்டத்தில் வாய்ப்பின்றி தடுமாறினார் . இதன் பிறகு குடும்பத்துடன் நியூசிலாந்தில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது நியூசிலாந்தில் பைக் மெக்கானிக்காக பணி புரிந்து வருகிறார். இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ள நடிகர் அப்பாஸ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ”தொடக்கத்தில் வெற்றி பெற்று வந்த என்னுடைய படங்கள் சில நாட்களில் காணாமல் போனது.வாடகை கொடுக்க கூட கையில் பணம் இல்லை. பிரபலமாகி விட்டதால் வேறு வேலை தேடி வெளியில் எங்கும் செல்லவும் முடியவில்லை. சலித்துப் போய் சினிமாவை விட்டு விலகி வந்து விட்டேன்.
சினிமா வாய்ப்புக்கள் குறைந்து , தேர்வில் தோல்வி அடைந்து , காதலியும் பிரிந்து சென்று விட்டார்.இதனால் விபத்தில் அடிபட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியது.அதே நேரத்தில் என்னுடைய இந்த முடிவால் டிரைவரின் வாழ்க்கை பாதிக்கப்படும். கொரோனா காலத்தில் சிலருக்கு உதவி செய்தேன். நியூசிலாந்தில் தங்கியிருந்தபோது ரசிகர்களிடம் ஜூம் காலில் பேசினேன். தற்கொலை எண்ணம் கொண்டவர்களின் மனநிலையை மாற்ற வேண்டும் என்பதை இலக்காக வைத்துக் கொண்டேன். என் குடும்பத்தை காப்பாற்றவே நியூசிலாந்தில் மெக்கானிக்காகவும், டாக்சி ஓட்டுனராகவும் பணிபுரிந்து வருகிறேன் எனக் கூறினார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?