9 வயது சிறுமியை கடுமையாக தாக்கிய கொடூர ஆசிரியர் `சஸ்பெண்ட்’

 
கொடூர ஆசிரியர்

மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஆசிரியர் ஜினேந்திர மோக்ரா என்பவர்  தனது வகுப்பில்  சரியாக படிக்காத குழந்தைகளை  தொடர்ந்து அடித்து துன்புறுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் தற்போதும்   கணக்கு பாடத்தில் தவறு செய்ததற்காக  ஒரு சிறுமியின்  கன்னத்தில் கொடூரமாக தாக்கியுள்ளார்.

 

வகுப்பறைக்குள் சென்ற ஆசிரியர் அணைத்து மானவிகளையும் கேள்வி கேட்கின்றார். பின்னர் தாக்கப்பட்ட  சிறுமியை கேட்டபோது அவர் 34 வரை சரியாக சொல்லி 35 என்று எண்களுக்கு பிறகு தடுமாறும்போது, ஆசிரியர் அந்த சிறுமியை  பளார் பளார் என்று அறைந்துள்ளார். மேலும்,  சிறுமையை கடுமையாகவும் அவர் திட்டியுள்ளார்.  பள்ளி குழந்தைகளை  அறவனைத்து அன்பால் பாடம் சொல்லிதருபவர்களே சிறந்த ஆசான். ஆனால் இங்கு இந்த ஆசிரியரின் செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பின்னர் இது குறித்த வீடியோ வெளியானதை தொடர்ந்து ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அலுவலர் கே.சி.சர்மா தெரிவித்தார்.  பள்ளிகளில் குழந்தைகள் ஆசிரியர்களாம் இப்படி காட்டுமிராண்டி தனமாக தாக்கப்படுவது பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆசிரியரும் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

From around the web