ஆசிரியர்கள் உற்சாகம்... அரசுத் தேர்வுகள் இயக்குநர் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் மாநில பள்ளிக்கல்வித்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி நிறைவடைந்தது. இந்த தேர்வினை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18, 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இந்நிலையில் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 4ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 11 மற்றும் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்துதல் பணிக்கு ஏப்ரல் 19- தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் பொ.அன்பழகன் தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணிகள் ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே கிறிஸ்துவ பண்டிகையான புனித வெள்ளி ஏப்ரல் 18-ம் தேதியும், ஈஸ்டர் ஏப்ரல் 20-ம் தேதியும் கொண்டாடப்படவுள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி விடைத்தாள் திருத்துதல் பணி நடைபெறவிருக்கிறது. இதனால் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றும் ஆசிரியர்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாட முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்நிலையை ஏப்ரல் 19ம் தேதி விடைத்தாள் திருத்துதல் பணிக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இது ஆசிரியர்கள் தங்களின் குடும்பத்தினருடன் பண்டிகையை சிறந்த முறையில் கொண்டாட உதவும். மேலும், மற்ற ஆசிரியர்களுக்கும் தொடர் பணிகளுக்கு இடையே சிறு ஓய்வு கிடைக்கும் என தெரிவித்திருந்தனர்.
எனவே ஏப்ரல் 19ம் தேதி சனிக்கிழமை விடைத்தாள் மதிப்பீட்டு முகாமுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் முதுகலை ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் லதா மார்ச் 2025 மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு பொதுத்தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியின் போது ஏப்ரல் 18 ( புனித வெள்ளி ) மற்றும் ஏப்ரல் 20 ( Easter ) ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாள் என்பதால் , பார்வையில் காணும் முதுகலை ஆசிரியர்களின் கோரிக்கை ஏற்கப்படும். ஏப்ரல் 19 அன்று Easter Eve முன்னிட்டு அன்றைய தினம் மதிப்பீட்டுப் பணிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் ஆசிரியர்கள் குஷியில் இருந்து வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!