நிர்வாண கோலத்தில் இளம்பெண் சடலம்?! போலீசார் தீவிர விசாரணை!

 
ராஜேஸ்வரி

திருவண்ணாமலையில் நிர்வாண கோலத்தில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரத்தை சேர்ந்தவர் பழனிவேல். விவசாயம் செய்து வருகிறார். இவரது நிலத்தில் விளைந்த கரும்புகளை தொழிலாளர்கள் அறுவடை செய்து கொண்டிருந்தனர். அப்போது கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் சந்தேகமடைந்து தோட்டத்தின் மையப்பகுதிக்கு சென்றனர்.

அப்போது ஒரு பெண் சடலம் அழுகிய நிலையில் நிர்வாணமாக  கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து பழனிவேல் தண்டராம்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அழுகிய நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, ​​இறந்தவர் தண்டராம்பட்டு ஊராட்சி அணைக்கட்டு சாலை பகுதியை சேர்ந்த சங்கர் மகள் ராஜேஸ்வரி (30) என்பது தெரியவந்தது. மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரியை கடந்த 9ம் தேதி முதல் காணவில்லை என கொடுத்த புகாரின் பேரில் தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பின் கொலை செய்து, உடல் நிர்வாணமாக வீசப்பட்டிருக்கலாம் என விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் பங்க் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web