ஜம்முவில் நீடிக்கும் பதற்றம்... பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

புதன்கிழமையில் ஆரமுல்லாவின் உரி நலாவில் உள்ள சர்ஜீவன் பகுதி வழியாக சுமார் இரண்டு அல்லது மூன்று பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதாகவும் அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் தொடங்கியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
OP TIKKA, Baramulla
— Chinar Corps🍁 - Indian Army (@ChinarcorpsIA) April 23, 2025
On 23 Apr 2025, approximately 2-3 UI terrorists tried to infiltrate through general area Sarjeevan at Uri Nala, Baramulla, the alert tps on LC challenged and intercepted them resulting in a firefight.
Operation is in progress.#Kashmir@adgpi… pic.twitter.com/FOTXiTNYSf
இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் பிரிவு எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், "பாரமுல்லாவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள். ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது" என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் நடந்த பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். பஹல்காமில் உள்ள 'மினி சுவிட்சர்லாந்து' என அழைக்கப்படும் பைசரன் புல்வெளியில் இந்த தாக்குதல் நடந்தது. இந்தக் கொடிய தாக்குதலைத் தொடர்ந்து இந்த மோதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!