காஷ்மீரில் பரபரப்பு... 2 பேர் கைது... 5 தீவிரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டம்... வேட்டையை தொடங்கிய இந்திய ராணுவம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ம் தேதி செவ்வாய்க்கிழமை சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து எல்லைப்பகுதியில் போர்ப்பதற்றம் நீடித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் உள்ள கைமோ பகுதியில் தீவிரவாதிகளுக்கு உதவி செய்த இரண்டு பேரை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.அத்துடன் அவர்களுடைய வீடுகளையும் இடித்துள்ளனர். அதுபோக பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 தீவிரவாதிகளின் வீடுகளும் இடிக்கப்பட்டுள்ளன.
அதன்படி மொத்தமாக ஜம்மு காஷ்மீரில் 5 வீடுகளை ராணுவம் தகர்த்தெறிந்துள்ளது. தீவிரவாதத்தில் ஈடுபட்டால் இதுதான் தண்டனை என்கிற அளவுக்கு இந்திய ராணுவம் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எல்லையில் பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவத்தினர் வீரர்களை குவித்து வைத்துள்ளதால் போர் பதற்றமும் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!