திருச்சியில் பரபரப்பு... பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொலை!

 
திருச்சி ரவுடி ஜெகன்

திருச்சி அருகே பிரபல ரவுடி ஜெகனை, போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கொம்பன் ஜெகன் என்ற ரவுடியை போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர். அவர் சமயபுரம் அருகே மறைந்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிந்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாரை தாக்கி விட்டு கொம்பன் ஜெகன் தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது.

துப்பாக்கி

இதனால் போலீஸார் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் கொம்பன் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கி ரத்தம் க்ரைம் தற்கொலை கொலை

போலீஸாரின் முதல்கட்ட தகவலின்படி, உதவி ஆய்வாளர் வினோத்தை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது ரவுடி ஜெகன் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட கொம்பன் ஜெகன் மீது 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

From around the web