கல்லூரி மாணவர் சாலை விபத்தில் பலி... நண்பர்களுடன் பைக்கில் சென்ற போது சோகம்!
கேரள மாநிலம் பாலக்காட்டில் வாளையார் சுள்ளிமடையில் பைக் மரத்தில் மோதியதில் செவிலியர் மாணவர் நேற்று ஏப்ரல் 10ம் தேதி புதன்கிழமை உயிரிழந்தார். இவர் 20 வயது ஆல்வின் மனோஜ். இவர் கோவை மகாலிங்கபுரத்தில் சிஆர்பிஎப் உதவி சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் காஞ்சிரப்பள்ளியைச் சேர்ந்த மனோஜ் கேஜோசப்பின் மகன் ஆல்வின்
ஆல்வினுடன் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த நாகராஜ் பைக் விபத்தில் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து நேற்று அதிகாலை 5.30 மணியளவில் நடந்ததாகத் தெரிகிரது.
ஆல்வின், தந்தையை இழந்த தனது நண்பரைப் பார்க்க மணற்காடுக்குச் சென்றுவிட்டு கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். 2 பைக்கில் தலா இருவர் சென்றனர். இதில் ஆல்வின் சென்ற பைக் விபத்துக்குள்ளானது கூட தெரியாமல் மற்றொரு பைக்கில் இருந்த நண்பர்கள் வெகுதூரம் சென்று விட்டனர்.
நெடுஞ்சாலைத்துறை காவல்துறையினர் விபத்தில் சிக்கிய மாணவர்களை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே ஆல்வின் இறந்து விட்டார்அவரது பிரேத பரிசோதனைக்கு பின், கோவை பொத்தனூர் வெள்ளலூரில் உள்ள செயின்ட் க்ளோடில்டா தேவாலயத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட பின் நேற்று இரவு காஞ்சிரப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று பிற்பகல் 3 மணிக்கு பொந்தன்புழா சேக்ரட் ஹார்ட் தேவாலய மயானத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!