பயங்கர ரயில் விபத்து... ஒருவர் பலி... 25 பேர் படுகாயம்!
ஜெர்மனியில் வடக்கு துறைமுக நகரமான ஹாம்பர்க்கின் ரோன்பர்க்கில் உள்ள தொடர்ந்துக் கடவையில் அதிவேக தொடர்ந்து ஒன்று பாரவூர்தியுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இன்ர சிற்றி எக்பிரஸ் என அழைக்கப்படும் அதிவேக ரயில் ஹாம்பர்க்கிலிருந்து ம்யூனிக் செல்லும் வழியில் ரோன்பர்க்கில் உள்ள தொடருந்துக் கடவையில் தண்டவாளங்கள் ஏற்றப்பட்ட பாரவூர்தியில் மோதியது.

தொடருந்து ஓட்டுநர் அவசரகால பிரேக்கைப் பயன்படுத்தியபோதும் தொடருந்தை சரியான நேரத்தில் ஓட்டுநரால் நிறுத்த முடியவில்லை. தொடருந்தின் இயந்திரம் வேகமாக பாரவூர்தியில் மோதியது.விபத்தில் தொடருந்தில் பயணித்த 55 வயதுடைய பயணி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் ஒருவர் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை உலங்கு வானூர்தியில் ஏற்றப்பட்டு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில் அடுத்து 80க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் உட்பட அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளைத் தொடர்ந்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
