மகன் கண் எதிரே பயங்கரம்... ராட்சத அலையில் சிக்கி தாய் பலியான சோகம்!

 
மாமல்லபுரம்

சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரம் கடற்கரைக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் கடற்கரையில் இயற்கையை அனுபவிக்கவும், பல்லவர் கால சிற்பங்களைக் கண்டு ரசிக்கவும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் அதிகளவில் வந்து குவிகின்றனர். 

இந்நிலையில், மாமல்லபுரம் கடற்கரைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண், தன் மகன் கண் எதிரிலேயே ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு  வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வெளிநாடுகளில் இருந்து வந்து கொண்டிருந்தாலும் டிசம்பர் துவங்கி ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் வரையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும். இந்நிலையில், லண்டனில் உள்ள அரசு மருத்துவமனையில் உடல் மசாஜ் தெரப்பிஸ்டாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பரிகெட் டைலர் (84) என்பவர் தனது மகன் ரூபர்ட்டைலர் (58) என்பவருடன் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார்.

மாமல்லபுரம்

மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகே ஒரு ஓட்டலில் தாய், மகன் இருவரும் அறை எடுத்து தங்கி இருந்தனர். நேற்று மாமல்லபுரம் புராதன சிற்பங்களை சுற்றி பார்த்த இருவரும் பிறகு மாமல்லபுரம் கடற்கரைக்கு சென்று சிறிது நேரம் பொழுதை கழித்தனர். அப்போது 2 பேரும் கடலில் குளித்தனர். 84 வயதை கடந்த மூதாட்டி பிரிக்கெட் டைலர் கடல் பலத்த சீற்றமாக இருந்தபோதும், எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் தைரியமாக மாமல்லபுரம் கடலில் பலத்த அலைகளின் மத்தியில் குளித்து கொண்டிருந்தார்.

பிரிக்கெட் டைலர் அப்போது திடீரென ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். அருகில் இருந்த அவரது மகன் ரூபர்ட்டெய்லர் தனது தாயை காப்பாற்ற முயன்றார். 100 மீட்டர் தொலைவிற்கு அவரது உடல் கடலில் அடித்து செல்லப்பட்டதால், தாயை அவரால் காப்பாற்ற முடியவில்லை. பிறகு ஒரு மணி நேரம் கழித்து மூதாட்டி பிரிக்கெட் டைலர் உடல் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகிதாஸ்ரீ, மாமல்லபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இங்கிலாந்து நாட்டு பெண் சுற்றுலா பயணி கடலில் மூழ்கி இறந்தது பற்றி சென்னையில் உள்ள இங்கிலாந்து நாட்டு தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இறந்த அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து, தூதரகத்தின் அனுமதியுடன் இங்கிலாந்து நாட்டிற்கு விமானம் மூலம் அனுப்ப போலீசார் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web