பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.... ஜம்மு -காஷ்மீரில் பரபரப்பு!

ஜம்மு- காஷ்மீரில் ஆனந்த் நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலா பயணி ஒருவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்த் நாத் பகுதியை சேர்ந்த பகால்காம் என்னும் புகழ்பெற்ற சுற்றுலா தளம் அமைந்துள்ளது .
அப்பகுதிக்கு குதிரையில் அல்லது நடந்து மட்டுமே செல்ல முடியும். இன்று ஏப்ரல் 22 எப்போது போல சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர் .அங்கே முகமூடி அணிந்து அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் சுற்றுலா பயணிகள் ஒருவர் பலியானதாகவும், மேலும் 12 சுற்றுலாப் பயணிகள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியில் சிதறி ஓடினர். அங்கிருக்கும் அதிகாரிகள் அவர்களை பத்திரமாக ஹெலிகாப்டரின் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது