தஞ்சாவூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக சரவணகுமார் பொறுப்பேற்றார்!

 
தஞ்சாவூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக சரவணகுமார் பொறுப்பேற்றார்!

தஞ்சாவூா் மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமனம் செய்யப்பட்டிருந்த சரவணகுமார் பொறுப்பேற்றார். தமிழகத்தில் உள்ள மாநகராட்சி ஆணையா்கள் இடமாற்ற விவரங்களை அரசு வெயிட்டது.

தஞ்சாவூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக சரவணகுமார் பொறுப்பேற்றார்!

தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையராக இருந்த ஜானகி ரவீந்திரனை தஞ்சாவூா் மண்டல நகராட்சியின் இயக்குநராக நியமித்து மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்ற விபரங்களை அரசு வெளியிட்டிருந்தது. அதே போல், திருப்பூா் மண்டல நகராட்சிகள் இயக்குநராக இருந்த சரவணகுமாரை தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்து அரசு வெளியிட்டிருந்தது. அதன் படி, தஞ்சாவூர் மாநகராட்சியின் ஆணையராக சரவணகுமார் பொறுப்பேற்று கொண்டார்.

தஞ்சாவூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக சரவணகுமார் பொறுப்பேற்றார்!


தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்று கொண்டவுடன், பொதுமக்களின் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து தீா்வு காணப்படும் என்று சரவணகுமார் தெரிவித்தார்.

கடந்த 2009ல் பெரியகுளம் நகராட்சியில் ஆணையராகப் பணியில் சேர்ந்த சரவணகுமார், நாகா்கோவில் மாநகராட்சியிலும் ஆணையராக பணியாற்றி உள்ளார்.

From around the web