அந்த மனசு தான் சார் கடவுள்... சட்டையை கூட போடாமல் சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர்... காப்பாற்றப்பட்ட உயிர்!

 
அந்த மனசு தான் சார் கடவுள்... சட்டையை கூட போடாமல் சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர்... காப்பாற்றப்பட்ட உயிர்! 

திருச்சூர் மாவட்டம் எங்கண்டியூர் பகுதியில் வசித்து வருபவர் அஜ்மல். 24 வயதான இவர் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு 9 மணிக்கு தனது பணியை முடித்துக்கொண்டு அலுவலக கட்டடத்தின் கீழே தனது ஆம்புலன்ஸை கழுவி கொண்டு இருந்தார். தனது சட்டையை மேல் மாடியில் உள்ள அறையில் வைத்தார். 

ஆம்புலன்ஸ்

அப்போது திடீரென தனது நண்பன் சரத் என்பவரிடம் இருந்து போன் வந்தது. தனது சகோதரன் வீட்டு மாடியில் இருந்து விழுந்துவிட்டான். அடிபட்டு மூச்சு பேச்சில்லாமல் இருக்கிறான். அந்த அவசரநிலையை உணர்ந்த அஜ்மல், தற்போது 2வது மாடிக்கு சென்று சட்டையை எடுக்க நேரம் ஆகும் என்பதால் உடனடியாக வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அருகே சுமார் 1 கிமீ தூரத்தில் தனது நண்பன் சரத் வீட்டை அடைந்த அஜ்மல், 17 வயதான தம்பி நவீனை தூக்கி கொண்டு ஆம்புலன்சில் ஏற்றி 9 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு வெறும் 5 நிமிடத்தில் மின்னல் வேகத்தில் பறந்தார் அஜ்மல். மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் துரிதமாக சென்றதால் தனது நண்பனின் தம்பி நவீனின் உயிர் காப்பாற்றப்பட்டது.

நண்பன் போன் செய்த உடன் அவசரம் அறிந்து சட்டை கூட அணியாமல் மின்னல் வேகத்தில் சென்று உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர் அஜ்மலின் செயல் பலராலும் பாரட்டப்பட்டு வருகிறது. மேலும், அஜ்மல் சட்டையில்லாமல் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் பரவி அவருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

17 வயது சிறுவன் நவீன், ” தனது வீட்டில் மொட்டை மாடியில் உள்ள பூனை மற்றும் புறாக்களுக்கு தீனி வைக்க சென்றேன் எனவும், அப்போது மயங்கி விழுந்து விட்டேன். அந்த சமயம் என்ன நடந்தது என்றே எனக்கு நினைவில்லை. எனது அம்மா தான், அண்ணன் அஜ்மல் தூக்கி கொண்டு சென்றதாக கூறினார். தற்போது தோள்பட்டை மற்றும் கையில் அடிபட்டுள்ளது. சிகிச்சைக்கு பிறகு பரவாயில்லை எனக் கூறியுள்ளார்.

From around the web