கணவரை இழந்த பெண்களை மயக்கி அனுபவித்த ஜோதிடர்.. விபரீதத்தில் முடிந்த கள்ளக்காதல்..

 
பரமேஸ்வரி

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே கொண்டமநாயக்கன்பட்டி மேற்கு வீதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன்(60). இவர் அப்பகுதியில் பிரபலமான ஜோதிடராக இருந்துள்ளார். இவரது மனைவி பேபி (55). இவர்களுக்கு நிரேஷ்குமார் (34), சிமல் (28) என்ற மகன்கள் உள்ளனர்.

சுந்தர்ராஜன், ஜோசிய பார்க்க வருபவர்களில் கணவரை பிரிந்து வாழும் பெண்கள் மற்றும் கணவரை இழந்த பெண்களை மயக்கி, தனது வலையில் வீழ்த்தி அவர்களுடன் தகாத உறவு வைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் பரமேஸ்வரி (48), என்ற பெண் சுந்தர்ராஜனிடம் ஜோசிடம் பார்க்க வந்துள்ளார்.

அப்போது பழக்கம் ஏற்பட்டு அது தகாத உறவாக மாறியது. பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக அனுபவித்து வந்தனர். இதனை தெரிந்துகொண்ட சுந்தர்ராஜனின் மனைவி பேபி, 2 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து மகன்களுடன் வெளியூர் சென்றுவிட்டார். அதன் பின்னர் வீட்டில் தனியாக வசித்து வந்த சுந்தர்ராஜனுக்கு, பரமேஸ்வரி உணவு கொடுத்து கவனித்து வந்துள்ளார்.

பரமேஸ்வரி

இந்நிலையில், நேற்று காலை சுந்தர்ராஜன், தனது வீட்டில் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல் வெளியானது. சுந்தர்ராஜனின் கள்ளக்காதலியான பரமேஸ்வரிக்கு வீட்டை எழுதி வைத்துள்ளார். அவருக்கு சொந்தமான 2 வீட்டுமனைகள் மற்றும் பணத்தை தனக்கே தரும்படி பரமேஸ்வரி கேட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், பரமேஸ்வரிக்கு சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த கார்த்தி (24) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், இதனை அறிந்த சுந்தர்ராஜன், கார்த்தியுடனான உறவை கைவிடும்படி பரமேஸ்வரியை கண்டித்துள்ளார். ஆனால், அவர் கார்த்தியுடன் சேர்ந்து சுந்தர்ராஜனை கொலை செய்ய திட்டம் தீட்டினார். 

பரமேஸ்வரி

அதன்படி, நேற்று முன்தினம் இரவு, சுந்தர்ராஜனின் வீட்டுக்கு பரமேஸ்வரி, கார்த்தியுடன் சென்றுள்ளார். அங்கு தூங்கிக் கொண்டிருந்த சுந்தர்ராஜனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியது தெரிய வந்தது. இதையடுத்து, பரமேஸ்வரி மற்றும் கார்த்தியை போலீசார் கைது செய்தனர். பிரபல ஜோதிடர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சேந்தமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web