அதிர்ச்சி!! ஆட்டோவில் பயணியின் விரலை கடித்து துப்பிய ஆட்டோடிரைவர்!!
சென்னை வெட்டுவாங்கேணியில் வசித்து வருபவர் ராமு. இவர், பணி முடிந்து திருவான்மியூரில் இருந்து ஆட்டோவில் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த ஆட்டோவில் இருக்கையின் பின்புறம் கம்பிகள் வைக்கப்பட்டிருந்தன. எப்படி உட்காருவது யோசனை செய்தபடியே ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தார். அதில் உள்ள கம்பியில் அவர் காலை வைத்து விட்டார். இதற்கு ஆட்டோ ஓட்டுனர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆட்டோ ஓட்டுனர் ஆத்திரம் அடைந்தார். ஆட்டோவில் இருந்த கம்பியை எடுத்து ராமுவை தாக்கியுள்ளார். மேலும் ஆத்திரம் தீராத அவர், ராமுவின் கை சுண்டு விரலை கடித்து துப்பி விட்டார். ஆட்டோவில் ரத்தம் வடிய நின்று கொண்டிருந்த ராமுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவருடைய கை விரலை ஒட்டவைக்க முடியாது என்று கூறிவிட்டனர்.இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆட்டோ ஓட்டுநர் சந்தானம் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவருடைய ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க