கொடூரம்... இளம்பெண் எரித்து கொலை!
தென்காசி மாவட்டத்தில் இலத்தூர் பகுதியில் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் எரிந்த இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எரிக்கப்பட்ட இளம்பெண் யார்? கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இளம்பெண் சடலம் எரிக்கப்பட்ட இடத்திற்கு அருகே மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டு இருக்கும் நிலையில், மதுபோதையில் சம்பவம் நடைபெற்றதா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எரிந்த உடலுக்கு அருகே கிடந்த மதுபாட்டில்கள் , தடயங்களை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளக்கரையில் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
