பகீர்!! கொலை செய்து உடலை 6 பாகங்களாக வெட்டி புதைத்து மாங்கன்று நட்ட கொடூரம்!! தொடரும் ஷ்ரத்தா வாக்கர் படுகொலைகள்!!
தலைநகர் டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் கொடூரக் கொலைக்குப் பிறகு அதுமாதிரியான தொடர் கொலைகள் அதிகரித்து வருகின்றன. இச்சம்பவங்கள் மக்கள் மனதில் பெரும் பீதியை கிளப்பி வருகின்றன. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் தகூர்வாஸ் கிராமத்தில் வசித்து வருபவர் ஜோகிந்தரா . இவருக்கு வயது 33. இவரது மனைவிக்கும் அதே கிராமத்தில் வசித்து வரும் மதன்லால் என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்தது. ஜூலை 11ம் தேதி ஜோகிந்தரா வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை எனத் தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த ஜோகிந்தராவின் தந்தை இது குறித்து ஜூலை13ம் தேதி காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மதன்லாலை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் ஜோகிந்தராவை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்ததை மதன்லால் ஒப்புக்கொண்டார். அன்றைய தினம் மாலை ஜோகிந்தராவை அழைத்துக்கொண்டு கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதிக்கு மதன்லால் சென்றார் . இருவரும் மதுக்குடித்த நிலையில் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஜோகிந்தராவை கூர்மையான ஆயுதத்தால் மதன்லால் சராமாரியாக தாக்கினார். இந்த கொடூர தாக்குதலில் ஜோகிந்தரா சம்பவ இடத்திலேயே பலியானார். வழக்கம் போல் கிராமத்திற்கு திரும்பி வந்த மதன் லால் மீண்டும் நள்ளிரவில் வனப்பகுதிக்கு சென்றார்.
அங்கு உயிரிழந்த நிலையில் கிடந்த ஜோகிந்தராவின் உடலை 6 துண்டுகளாக தலை, கைகள், கால்கள் என உடலை துண்டு துண்டாக வெட்டினார். இந்த உடல் பாகங்களை மதன்லால் கிராமத்தில் உள்ள மத வழிபாட்டு தலத்தில் புதைத்துள்ளார். உடல் பாகங்களை புதைத்த பின் அந்த இடத்தில் மாங்கன்றுகளை நட்டு வைத்தார். இதனால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக கடந்த சில நாட்களாக தினமும் காலை அந்த மாங்கன்றுகளுக்கு தண்ணீரும் ஊற்றினார். இந்த பகீர் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மாங்கன்றுகளை நீக்கிவிட்டு புதைக்கப்பட்ட ஜோகிந்தராவின் உடல்பாகங்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கள்ளக்காதல் விவகாரத்தில் ஜோகிந்தராவை கொலை செய்த மதன்லாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?