அதிர்ச்சி!! வாக்கிங் சென்றவரை கல்லால் அடித்து கொலை செய்து உடலை கடலில் வீசிய கொடூரம்!!

 
சாமுவேல்

சென்னை புதுவண்ணாரப்பேட்டை அண்ணாநகர் குடிசைப்பகுதியில் இன்று காலை இருவர் மது அருந்திக்  கொண்டிருந்தனர்.   போதை தலைக்கேறிய பின்னர் அவர்கள் இருவரும் கொலையை பற்றி பேசி உளறிய படி இருந்தனர். இதனை அந்தவழியாக சென்றவர்  ஒருவர் கேட்டுவிட்டு  இது குறித்து  காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்  போதையில் இருந்தவர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.பல திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் வெளிவந்தன.

கட்டையால் அடித்து கொலை

அதன்படி சாமுவேல், சஞ்சய்  இருவரும்   அதே பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் . இவர்கள் காசிமேடு நாகூர்மீரான் தோட்டம் அருகே உள்ள கடற்கரை பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் போதையில் செல்போன் பேசிக்கொண்டே நடத்து சென்றுள்ளார். ஏற்கனவே  அங்கு போதையில் இருந்த ரவுடி சஞ்சய் மற்றும் சாமுவேல் இருவரும்  அந்த நபரை வழிமறித்து செல்போனைப் பறித்துள்ளனர். அவரை  கீழே தள்ளி விட்டு, அருகில் இருந்த கல்லை எடுத்து அடித்துக் கொலை செய்து அவரது உடலை கடலில் வீசி விட்டனர்.   அங்கிருந்து புறப்பட்டு சென்ற ரவுடி சஞ்சய் தான் வேலை பார்க்கும் படகில் சென்று தூங்கிவிட்டார்.  சாமுவேல் தனது வீட்டிற்கு சென்று தூங்கினார். 

தந்தையை கொலை செய்த மகன்!! திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்!!
இன்று காலை மீண்டும் இருவரும் ஒன்றாக மது அருந்திய போது குடிபோதையில் கொலை குறித்து பேசிக்கொண்டிருந்த போது தான் வழிபோக்கர் ஒருவர் கேட்டு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த தகவலின் பேரில் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அத்துடன் கொலையானவர் குறித்த தகவல்களை விசாரித்து வருகின்றனர்.  
இதற்கிடையே ரவுடி சஞ்சய்யை போலீஸார் பிடிக்கச் சென்ற போது அவனை கைது செய்யவிடாமல் அவரது அண்ணன் ரவுடி வெங்கட்ராமன், மாமா நரேஷ், தாய் அமுதவள்ளி, தந்தை சத்தியசீலன், நண்பர்கள் கதிர், வசந்த் ஆகியோர் போலீஸாரை தகாத வார்த்தையால் திட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதனால்  போலீஸார் அவரது உறவினர்களைக் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய தந்தை சத்தியசீலன், கதிர், வசந்த்   3 பேரையும் தேடி வருகின்றனர். கடற்கரையில் நடந்து சென்ற வாலிபரை செல்போனுக்காக கொலை செய்து கடலில் வீசிய சம்பவம் சென்னை முழுவதும் பெரும் பரபரப்பையும்,  அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web