காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் உடல் நசுங்கி 4 பேர் பலி!!

 
விபத்து

தமிழகத்தில் கன்னியாகுமரியில் இருந்து 3 பேர் நேற்று இரவு காரில் சென்னை திரும்பி   கொண்டிருந்தனர். திருமங்கலம் - விருதுநகர்  4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது கள்ளிக்குடி விளக்கு பகுதியில் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.  இதனையடுத்து கார் சாலையின் தடுப்புச்சுவரை தாண்டி பறந்து சென்று சாலையின் மறுபக்கத்தில் சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது.  

விபத்து

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த கன்னியாகுமரி மாவட்டம் தேங்கன்குழிவிளையை சேர்ந்த சம் டேவிட்சன், மார்ட்டின், கமலநேசன் மற்றும் கண்டெய்னர் லாரி டிரைவர் செல்வகுமார்  4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

ஆம்புலன்ஸ்

காரில் பயணித்த 3 பேரும் ஒரேகுடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  ஏற்கனவே நேற்று மதுரை  சுங்கச்சாவடியில் லாரி  அடுத்தடுத்து 2 வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.  அதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலையில் திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் மினி கண்டெய்னர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உடல் நசுங்கி  உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web