டிஐஜி தொடர்ந்த வழக்கு... திருச்சி நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகவில்லை!

திருச்சி சரக டிஐஜி வருண்குமார், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ந்த அவதூறு வழக்கு திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4ல் நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த 8ம் தேதி காலை சீமான் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது வருகையை பதிவு செய்து கொண்ட நீதிபதி விஜயா, வழக்கு விசாரணையை இன்று ஏப்ரல் 29ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. இதில் டிஐஜி வருண்குமார் ஆஜரானார். டிஐஜியின் ஆவணங்களுக்கு பதிலளிக்க அளிக்க வேண்டிய சீமான் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் மே 8ம் தேதிக்கு ஒத்திவைத்தும், அன்றைய தினம் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி விஜயா உத்தரவிட்டார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!