கதறிய மகள்...கணவன், மனைவி இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

 
 கணவன், மனைவி இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

 
தமிழகத்தில்  கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த ஜெகதேவி பகுதியில் வசித்து வருபவர் குமார், கவிதா தம்பதியினர் . இவர்கள் தங்களது 17வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இது குறித்து  காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், குழந்தை திருமணத்தை நடத்தியதல்  பெற்றோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் பெற்றோர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.  
இருவரும் முன்ஜாமீன் வாங்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு செல்வதாக வீட்டைவிட்டு வெளியேறிய இருவரும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், திருப்பத்தூர் அருகே கீழ் குறும்பர் தெரு பகுதியில், ரயில் முன் பாய்ந்து கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  
முன் ஜாமின் வாங்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற நிலையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து  ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து சிதறி கிடந்த உடல்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்ததும் மகள் கதறிய காட்சி காண்பவர்களிடையே பெரும் துக்கத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

 

From around the web