மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு.. நாளை பள்ளி விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா..?

 
பள்ளி விடுமுறை

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிப்பதாக மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 5 நாட்களாக பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் வாரத்தின் நடுவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதை ஈடுகட்ட சனிக்கிழமையான நாளையும் பள்ளி செயல்பட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. 

இந்த நிலையில் மழைக் காரணமாக அட்டவணைப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை (நவ-25)விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

விடுமுறை

அதைப் போல், செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை(நவ.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் நாளை அனைத்து வகை பள்ளிகளும் செயல்படக்கூடாது பள்ளிகளில் எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது எனவும் மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

From around the web