ஒமைக்ரானுக்கு பயந்து குடும்பத்தினரை கொலை செய்த மருத்துவர்!! பரபரப்பு வாக்குமூலம்!!

 
ஒமைக்ரானுக்கு பயந்து குடும்பத்தினரை கொலை செய்த மருத்துவர்!! பரபரப்பு வாக்குமூலம்!!


கொரோனா பரவலுக்கு அடுத்தபடியாக ஒமைக்ரான் இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதற்கான தடுப்பு மருந்துகள் குறித்து பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அதற்குள் ஒமைக்ரான் குறித்து பல்வேறு விதமான வதந்திகள் பரவி வருகின்றன. இந்த வைரஸ் அதிதீவிரமாக பரவி அனைவரும் உயிரிழந்து விடுவர் என்ற அச்சம் மக்களிடையே பரவி வருகிறது.

ஒமைக்ரானுக்கு பயந்து குடும்பத்தினரை கொலை செய்த மருத்துவர்!! பரபரப்பு வாக்குமூலம்!!


உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் தடயவியல் துறைத் தலைவராக பணிபுரிந்து வருபவர் 55 வயதான சுஷில் சிங். இவருக்கு 48 வயதில் மனைவியும், 18 மற்றும் 15 வயதில் மகனும், மகளும் இருந்தனர். ஒமைக்ரான் அச்சம் இவரை விபரீத முடிவில் கொண்டு விட்டது.
இந்த முடிவின் படி தனது மனைவி மற்றும் மகன், மகளை, டாக்டர் சுஷில் சிங் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டார்.இதனை வாட்ஸ் அப் குறுந்தகவல் மூலம் சகோதரருக்கு அனுப்பியுள்ளார்.

ஒமைக்ரானுக்கு பயந்து குடும்பத்தினரை கொலை செய்த மருத்துவர்!! பரபரப்பு வாக்குமூலம்!!


இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு கொலை செய்யப்பட்ட 3 பேரின் உடல்களும் கிடந்தன. இவை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து வழக்குப் பதிவு செய்து, மருத்துவர் சுஷில் சிங்கை தீவிரமாக தேடி வருகின்றனர். மருத்துவர் ஒமைக்ரானுக்கு பயந்து தன் குடும்பத்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

From around the web