சிறுவனை கடித்து குதறிய நாய்கள்!! அடுத்தடுத்து 15 பேரை கடித்த சோகம்!!

 
வெறிநாய்

வெறிநாய்கள் குழந்தைகளை கடிக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. தெருநாய்களைக் கட்டுப்படுத்தவும், அவைகளுக்கு தடுப்பூசிகளை செலுத்தவும் எத்தனை நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் இவை தொடர்வது  பொதுமக்கள், பெற்றோரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டியில் கண்ணில் கண்டவர்களை எல்லாம் வெறிநாய் கடித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.  

வெறிநாய்


புளியம்பட்டியில் உள்ள டானாபுதூரில் தனலட்சுமியை  கடித்த அந்த நாயை, அப்பகுதி மக்கள் விரட்டிச் சென்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்த அந்த நாய், 15க்கும் மேற்பட்டோரை அடுத்தடுத்து கடித்துள்ளதாக தெருவாசிகள் தெரிவித்துள்ளனர். நாய் கடித்து படுகாயம் அடைந்த அனைவரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அவர்களில் தனலட்சுமி உட்பட 2 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.  

வெறிநாய்
இந்நிலையில், அதே பகுதியில் வசித்து வரும் சிறுவனை நாய் கடித்து இழுத்து சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவன் மற்றும் அக்கம்பக்கத்தினர் நாயை விரட்டியுள்ளனர். தமிழகத்தில் வெறிநாய் கடி அதிகரித்துள்ளது என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web